லட்சுமி கடாட்சம் எப்பொதும் வீட்டில் நிலைத்திருப்பதனையே அனைவரும் விரும்புவார்கள்.
லட்சுமி என்றும் நீங்காது இருக்க, செட்டிநாட்டில் வழங்கப்படும் நான்கு வரி பாடல் ஒன்று உள்ளது.
இப்பொழுதும் கூட இப்பாடல் அங்கு பல வீடுகளில் சட்டமிட்டு தொங்குவதை காணலாம் எனவும் கூறப்படுகின்றது.
“காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடு கட்டிக்கொண்டிருக்கும் வேள்வணிகர் – வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்காதிரு”