ஆல்ப்ஸ் மலையில் 5 ஜெர்மனி மலையேறும் வீரர்கள் தவறி விழுந்து பலி

ஆஸ்திரியா நாட்டில் ஷில்லெட்ரல் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையில் மலையேறும் பயிற்சியில் பல குழு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெர்மனி மலையேறும் வீரர் ஒருவர் கயிற்றில் இருந்து தவறி விழுந்தார்.

அதைத்தொடர்ந்து அவருடன் அதே கயிற்றில் ஏறிய மற்ற 4 வீரர்களும் 650 அடி பள்ளத்தில் தவறி விழுந்தனர். அதில் 5 பேரும் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் மட்டும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்குட்பட்டவர்கள்.

இதேபோன்று இத்தாலி ஆல்ப்ஸ் மலையில் டிரெண்டோ அருகே நடந்த மற்றொரு விபத்தில் மலையேறும் வீரர்கள் 3 பேர் தவறி விழுந்து பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் இத்தாலியை சேர்ந்தவர்கள்.