ஓவியாவை மிரட்டும் விஜய் டிவி !

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலம் ஆனதற்கு ஓவியாதான் காரணம். அவர் வெளியேறிய பிறகு நிகழ்ச்சி டல்லடிக்க ஆரம்பித்து விட்டது.

download (15)

பிக்பாஸ் விதிமுறைப்படி அதில் கலந்து கொள்பவர்கள், நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்கள் வரை அவர்கள் சொல்படி நடக்க வேண்டும்.

மேலும் பிக்பாஸ் விளம்பரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அப்படி விதிமுறையை மீறினால் ஒரு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்.

இதனால்தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, காயத்ரி, சக்தி, பரணி ஆகியோர் மீண்டும் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்த்தியும், ஜூலியும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரியும் கொடுத்துள்ளனர். அதுபோலவே ஓவியாவையும் சந்தித்து வருமாறு அழைப்பு விடுத்து உள்ளனர்.

அதற்கு அவர் வர மறுத்து விட்டார். இதனால் அவருக்கு பெரும் தொகை ஒன்றும் அபராதமாக விதிக்கப்பட்டது.

அதனையும் அவர் கட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்த முடியவில்லையாம்.

அதுமட்டும் அல்லாமல் அவர் பிக்பாஸ் வீட்டில் ஆரவ் இருக்கும் வரை வர முடியாது என்று கூறப்படுகிறது.

எனவே ஆரவை வெளியே அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகத்தான் ஆரவை எதிர்மறையாக காட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.