மஹிந்தவிற்கு எதி­ராக தகவலை வெளியிட்டார் பொன்சேகா.

பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி­ராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லாகும் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

sarath-fonseka2அத்துடன் முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்­டவை கைது செய்­த­மையில் எந்­த­வொரு தவறும் கிடை­யாது. இவர்­க­ளுக்கு நஷ்டஈடு செலுத்­து­வ­தற்கு தனி­யாக நிதியம் ஆரம்­பிக்க வேண்­டி­ய­தில்லை. தமது பணத்தை கொண்டே நஷ்­ட­ஈட்டை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி­ராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பெளத்த பக்­தர்கள் அணியும் சில் துணி விவ­காரம் தொடர்­பாக வின­விய போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்­டவை கைது செய்­ததில் எந்த தவறும் கிடை­யாது. ஆட்­சி­யாளர் பாலியல் துஷ்­பிர­யோகம் செய்ய சொன்­னாலும் செய்­வதா? அதற்கு இட­ம­ளிக்கக் கூடாது. மேலும் நினைத்த மாதிரி செல­வி­டு­வ­தற்கு இது ஒன்றும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தந்­தையின் உடை­மை­யில்லை.

மேலும் இரா­ணு­வத்தில் இணை­ப­வர்கள் அனை­வரும் தேச­ப்பற்­றுள்­ள­வர்கள் இல்லை. பணத்­திற்­காக செயற்­படப் கூடி­ய­வர்­களும் உள்­ளனர். ஆகவே மஹிந்த ராஜபக் ஷவின் கும்பலே எனக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றது என்றார்.