உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் இவ்­வ­ருடம் நடத்­தப்­ப­ட­மாட்­டாது! – மஹிந்த தேசப்­பி­ரிய

election-commissioner-sri-lankaஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் இவ்­வ­ருடம் நடத்­தப்­ப­ட­மாட்­டாது. ஜன­வரி மாதத்­தி­லேயே தேர்தல் நடத்­தப்­படும் வாய்ப்பு இருப்­ப­தாக தெரி­வித்த தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது  திருத்­தச்­சட்ட மூலம் நிறை­வேறும் வரை மாகாண சபை தேர்தல் தொடர்பில் தீர்­மானம் எடுக்க முடி­யாது எனவும் ஒரு வேளை குறித்த சட்டமூலம் நிறை­வே­றாத பட்­சத்தில் ஒக்­டோபர் மாதம் தேர்­த­லுக்­கான வேட்பு மனு கோரப்­படும் என்றும் குறிப்­பிட்டார்.

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் குறித்து தற்­போது சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஏனெனில் தேர்தல் நடத்த கூடிய கால­மான டிசம்பர் மாதத்தில் வரும் சனிக்­கி­ழ­மையை பரீட்­சைகள் திணைக்­களம் கோரி­யுள்­ளது. இதனால் க.பொ.த. சாதா­ரணதர பரீட்சை நடை­பெறும் காலங்­களில் தேர்தல் நடத்த முடி­யாது.

ஆகை­யினால் திகதி குறித்து சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இதனால் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் ஏற்­பா­டுகளை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. எனவே இது குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம்.

பெரும்­பாலும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்­து­வ­தற்கு அதி­க­ளவில் வாய்ப்­புகள் உள்­ளன. ஜன­வரி மாதத்தில் வரும் சனிக்­கி­ழமை தினங்­க­ளான 6 ஆம் திகதி அல்­லது 21 ஆம் திக­தி­களை தேர்­த­லுக்­காக ஒதுக்க முடியும்.

மேலும் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது  திருத்­தச்­சட்ட மூலம் நிறை­ வேறும் வரை மாகாண சபை தேர் தல் தொடர்பில் தீர்­மானம் எடுக்க முடி­யாது. ஒரு­வேளை குறித்த சட்டம் நிறை­வே­றாத பட்­சத்தில் ஒக்­டோபர் மாதம் தேர்­த­லுக்­கான வேட்பு மனு கோரப்­படும்.

தற்­போது அர­சியல் கட்­சி­களின் சுயலாபம் கார­ண­மாக உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் தேசிய தேர்­தல்­க­ளாக மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன. இவை இடைத்­தேர்­த­லாக நடத்த வேண்டியவையாகும். எவ்வாறாயினும் அரசியலமைப் பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறும் பட்சத்தில் 2018 அல்லது 2019 ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடத்த முடியும் என்றார்.