எதிர்வரும் 21 ஆம் திகதி இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு!

arasiyal-amaippuபுதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான இடைக்­கால அறிக்கை குறித்­தான இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­ப­தற்­கான வழி­ந­டத்தல் குழு அடுத்த வாரம் கூட­வுள்­ளது. இதன்­பி­ர­காரம் எதிர்­வரும் 21 ஆம் திகதி இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான நட­வ­டிக்­கைகள் மும்­மு­ர­மாக முன்­னெடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கி­ணங்க ஏற்­க­னவே அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் உப குழுக்­களின் அறிக்­கைகள்  சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்பில் அர­சி­யல்­கட்­சி­க­ளுக்­கி­டையில் வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் இடம்­பெற்ற வண்­ண­முள்­ளன.

குறிப்­பாக வழி­ந­டத்தல் குழுவின் கீழ் இயங்கும் உப குழுவின் அறிக்­கையின் ஊடாக அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்த சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்ட காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தற்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் ஆளு­நரின் அதி­கா­ரங்­களும் குறைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பாக தெற்கை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அர­சியல் கட்­சிகள் கடு­மை­யான எதிர்ப்­பு­களை வெளி­யிட்ட வண்­ண­முள்­ளன.

அத்­துடன் இதற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார். உப குழுவின் அறிக்­கையின் பிர­காரம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு கட்­டாயம் செல்ல வேண்டி ஏற்­படும்.

அர­சி­ய­ல­மைப்பின் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் தொடர்ந்தும் குறித்த செயற்­திட்டம் தாமதம் செய்­யப்­பட்டு வந்­தது.  செப்­டெம்பர் மாத­ம­ளவில் வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையை சமர்­ப்பிக்க முடியும் என ஏற்­க­னவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதன்­பி­ர­காரம் சுதந்­திரக் கட்சி, தமிழ் தேசியக்  கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட பெரும்­ப­லான கட்­சிகள் இடைக்­கால அறிக்­கைக்­கான யோச­னை­களை கைய­ளித்­துள்ள நிலையில் இறு­தி­யான தீர்­மானம் எடுக்கும் நோக்கில் அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழு அடுத்த வாரம் செவ்­வாய்­க்கி­ழ­மை கூடவுள்ளது.

இதனையடுத்து வழிநடத்தல் குழுவின் இறுதி தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடைக்கால  அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.