பஸ் சேவையை மீண்டும் ஆரம்­பிக்­க கோரிக்கை.!

b01248d5-7bae-4021-b1ab-a5970537d343மட்­டக்­க­ளப்­பு­ பு­கை­யி­ர­த ­நி­லை­யத்­திலி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள அக்­க­ரைப்­பற்று நக­ருக்­கா­ன ­பு­கை­யி­ர­த­ இ­ணைப்­பு பஸ் சேவையை மீண்டும் ஆரம்­பிக்­கு­மாறு பிர­யா­ணிகள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

காலை 6.05 மணிக்கு கொழும்பு கோட்­டை­யி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு புகை­யி­ரத நிலை­யத்­திற்கு பிற்­பகல் 2.45க்கு வரும் உதயதேவி புகை­யி­ர­த­ பயணிகள் மட்­டக்­க­ளப்­பு­ பு­கை­யி­ர­த­ நி­லை­யத்­தி­லி­ருந்து கல்­முனை ஊடாக அக்­க­ரைப்­பற்று செல்­வ­தற்கு இலங்கை போக்­கு­வ­ரத்து சபை­யி­னால் பஸ் வண்­டிகள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்த பஸ் சேவை இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளதால் கொழும்­பி­லி­ருந்து வரும் நிந்­தவூர், சம்­மாந்­துறை, ஒலுவில், பால­முனை, அட்­டா­ளைச்­சேனை, அக்­க­ரைப்­பற்று, திருக்­கோவில், பொத்­துவில் ஆகிய ஊர்­க­ளுக்கு செல்லும் பிர­யா­ணிகள் பல்­வேறு அசௌ­க­ரியங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

இதனால் பெண்கள், சிறு­வர்கள் மற்றும் நோயா­ளர்கள் சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­தி­லி­ருந்து மாலை 7.15க்கு புறப்­படும் புகை­யி­ரதம் மட்­டக்­க­ளப்­பு­ பு­கை­யி­ர­த ­நி­லை­யத்­தி­லி­ருந்து அதி­காலை 3.55 மணிக்கு வரும் பாடுமீன் கடு­கதி புகை­யி­ர­தத்தில் வரும் பிர­யா­ணி­களின் வசதி கருதி அம்­பாறை நகருக்கு செல்வதற்கு ஈடுபடுத்தப்பட்ட பஸ் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இரு பஸ் சேவைகளையும் பிரயாணிகளின் நன்மை கருதி மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.