எதிர்வரும் 20 ஆம் திகதிவரை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமாக விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் 48 மணி நேரத்துக்குள் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வொன்றை பெற்றுத்தராவிட்டால் எதிர்வரும் 15ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்துக்கு செல்வோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே எதிர்வரும் 20 ஆம் திகதிவரை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.