வாய்விட்டு சிரிக்கும் போது அப்படியே தூங்கிவிடும் இளம்பெண்!!

வாய்விட்டு சிரிக்கும் போதும் திடீரென அப்படியே தூங்கிவிடும் விசித்திர நோயால் இளம் பெண் ஒருவர் பாதிக்கபட்டுள்ளார்.

timthumb (4)

பிரித்தானியாவின் Nottingham நகரை சேர்ந்தவர் Jessica Southall (20) இவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.

Jessica, narcolepsy மற்றும் cataplexy எனப்படும் விசித்திர நோயால் பாதிக்கபட்டுள்ளார். அதாவது, எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடி தூங்கிவிடுவார்.

தூங்கும் சமயத்தில் அவர் மூளை செயல்பாட்டில் தான் இருக்கும். அருகில் நடக்கும் விடயங்களை அவரால் உணர முடியும். ஆனால் எழுந்திருக்க முடியாது.

தசைகள் பலமாக இல்லாததால் உடல் சோர்வடைந்து அவருக்கு இப்படி தூக்கம் வந்துவிடுகிறது.

பல்வேறு மருத்துவ சிகிச்சையளித்தும் Jessica-வுக்கு நோய் பிரச்சனை தீரவில்லை. இது குறித்து Jessica கூறுகையில், பதினாறு வயதில் இந்த பிரச்சனை எனக்கு ஏற்பட்டது.

உறவினருடன் பேசி கொண்டிருக்கும் போது அவர் கூறிய ஜோக்கை கேட்டு சிரித்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

தற்போது இது பழகிவிட்டதால் தூக்கம் வரப்போவதை முன்னரே அறிந்து கொண்டு படுக்கை அல்லது தரை பகுதிக்கு சென்று விடுவேன் என Jessica கூறியுள்ளார்.