கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் சில மணி நேரங்களுக்கு முடங்கி போயிருந்ததது ! பயணிகள் அவதி

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் சில மணி நேரங்களுக்கு முடங்கி போயிருந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக இந்த நிலை நேற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்

colombo-1இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டது. மாலை 4.30 மணி வரை இந்த நிலை நீடித்தது.
இந்த நெருக்கடி நிலை உலகிலுளள் விமான நிலையங்களிலும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது
பயணிகளின் ஆவணங்களைச் சோதனையிடும் இணையவழி வலையமைப்பிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இணையவழி சோதனைகள் முடங்கியதால் உள்வரும், வெளிச்செல்லும் பயணிகளை அனுமதிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்
அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில், கணனிகளின் கடவுச்சீட்டு விபரங்களை பரிசோதிக்க முடியாதிருந்த போதிலும், பயணிகளுக்கான பயண அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

உலகில் சுமார் 100இற்கும் மேற்பட்ட விமானசேவை நிறுவனங்களுக்கு இணையவழி பரிசோதனை மென்பொருளை வழங்கி வரும், அமாடியஸ் நிறுவனத்தின் பிரதான வழங்கல் மையத்திலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

லண்டனின் ஹீத்ரோ, மற்றும் கட்விக், பாரிஸ், சிங்கப்பூரின் சாங்கி, ஜொகனஸ்பேர்க், மெல்பேர்ண், சூரிச் மற்றும் வொசிங்டனின் றீகன் விமான நிலையம் போன்றனவும் இந்த தொழில்நுட்ப பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன