மத்திய மாகாண பாடசாலைகளுக்கு, தீபாவளி தினத்தினை முன்னிட்டு 17.10.2017 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 28-10-2017 ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலை நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.