ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சிலர் பழி கூறியதால் தனது ஆணுறுப்பை 30 வயது சாமியார் வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்ஸ்தான் மாநிலம், சுரு மாவட்டம், தாராநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ்(30). தன்னைத்தானே சாமியார் என்று பிரகடணப்படுத்தி கொண்ட இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் சந்தேகித்தனர்.
தன்னை நல்லவனாக நிரூபிக்க வேறு வழியறியாத சந்தோஷ் தாஸ், தனது ஆணுறுப்பை இன்று அறுத்தெறிந்தார். உடனடியாக தாராநகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அதீத ரத்தப்போக்கினால் மேல் சிகிச்சைக்காக பிகானர் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.