கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று கைது?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து இன்று நாடு திரும்பும் அவர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

gotabaya rajapaksa 2015 03 12கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட உள்ளார்.

இந்த திட்டத்தின் போது சுமார் 90 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.