காசிமேட்டில் மீனவர்கள் மீது தடியடி ; போக்குவரத்து பாதிப்பு.!

அதிவேக எஞ்சினைக் கொண்டு விசைப்படகுகளில் சிலர் மீன் பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது எனக்கோரி காசிமேடு பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள்தான் இந்த படகுகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மீனவர்கள்.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட மீனவர்களின் மீது தடியடி நடத்தப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதில் பெண்களும், முதியோர்களும் காயமடைந்தனர்.

முன்னதாக, அதிமுகவை சேர்ந்த மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் அதிவேக எஞ்சினைக் கொண்டு மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

police3567-23-1508736204