யாழில் இளைஞன் சுட்டுக் கொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

யாழ். அரியாலைப் பகுதியில் நேற்று பிற்பகல் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் குறித்த இளைஞனுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது டொன் பொஸ்கோ ரிக்மனுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் கருத்து தெரிவிக்கையில்,

“நானும் எனது நண்பனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

எமது மற்றுமொரு நண்­ப­னின் மோட்­டார் சைக்­கி­ளுக்கு பெற்­றோல் இல்லை என்று கூறி­ய­தால், எமது மோட்­டார் சைக்­கி­ளி­லி­ருந்து சிறிது பெற்­றோலை எடுத்­துச்­சென்று கொடுத்து விட்டு திரும்பி வந்­து­கொண்­டி­ருந்­தோம்.

மணி­யந்­தோட்­டம் சந்­தியை அண்­மித்­த­போது எதிரே மோட்­டார் சைக்­கி­ளில் முகத்தை மூடிய தலைக்­க­வ­சம் அணிந்­த­படி இரு­வர் வந்­த­னர்.

எம்மை அண்மித்ததும் அவர்களது மோட்டார் சைக்கிள் திடீரென நின்றது.

அதில் பயணித்தவர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார்.