தமி­ழீ­ழ­த்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை நிறுத்துங்கள் :பெல்­லன்­வில விம­ல­ரத்ன அநு­நா­யக்க தேரர் கோரிக்கை

இலங்கை அர­சி­ய­ல­மைப்­பிற்குள் இந்­தியா பல­வந்­த­மாக திணித்த 13ஆவது திருத்­தத்தை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் புதிய அரசியல­மைப்பு தொடர்பில் யோசனைகள் முன்­வைக்­

கப்­பட்­டுள்­ளன. தமி­ழீ­ழத்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்க நல்­லாட்சி அர­சாங்கம் முற்­பட்டால் மகா­சங்­கத்­தி­னரின் கடு­மை­யான எதிர்ப்பு­களை சந்­திக்க நேரிடும் என ஸ்ரீகல்­யாணி சாம­கி­ரி­தம்ம சங்க சபையின் அநு­நா­யக்க பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான அனைத்து நட­வ­டிக்­கை­களும் உடன் நிறுத்­தப்­பட வேண்டும். இதனை வலி­யு­றுத்தி மூன்று பிர­தான பௌத்த பீடங்­களும் விரைவில் கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட உள்­ளன . அதே போன்று அர­சாங்­கத்தின் அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கை­களை கண்­டித்து ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு மகஜர் கைய­ளித்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அகில இலங்கை பௌத்த சம்­மே­ள­னத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்­கான அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் மற்றும் முன்­னெ­டுப்­புகள் தொடர்பில் மஹா சங்­கத்­தினர் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

அனைத்து இன மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்கி பிரி­வி­னை­வா­தத்தின் பொறிக்குள் சிக்க வைக்கும் வகை­யி­லேயே தற்­போ­தைய அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான யோச­னை­களும் முன்­னெ­டுப்­பு­களும் காணப்­ப­டு­கின்­றன.

பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்­களை குறைக்கும் சரத்­துக்கள் , ஆளுநர் ஊடாக மாகாண சபை­களை கட்­டுப்­ப­டுத்தி ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை இரத்து செய்யும் வகை­யி­லான பரிந்­து­ரைகள் , வடக்கு மற்றும் கிழக்கை மீளி­ணைக்கும் யோசனை மற்றும் ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான திருத்­தங்கள் என்­பன வெளிப்­ப­டை­யா­கவே காணப்­ப­டு­கின்­றன.

பரஸ்­பர விரோத அர்த்­தங்­களை தர கூடிய சொற்கள் தமிழ் , சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி சொற்கள் பல காணப்­ப­டு­கின்­றன.

மறு­புறம் சாதா­ரண மக்­க­ளுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தேவை­யில்லை. இலங்­கையில் வாழும் மொத்த தமி­ழர்­களில் வெறும் 32 வீத­மான தமி­ழர்கள் மாத்­தி­ரமே வடக்கில் வாழ்­கின்­றனர்.

இவர்­க­ளிலும் சிறிய தொகை­யி­னரே பல்­வேறு உள்­நோக்­கங்­க­ளுடன் செயற்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து பேசு­கின்­றனர்.

உள் நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் வாழும் பிரி­வி­னை­வாத சக்­திகள் இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு சூழ்ச்­சி­களை செய்து வரு­கின்­றன. எனவே மீண்டும் சர்­வ­தே­சத்­திற்கு அடி­ப­ணியும் நிலைமை ஏற்­பட்டு விட கூடாது .

புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற போர்­வையில் நாட்­டிற்குள் கொண்டு வரு­வது என்ன ? என்­பதை அனை­வரும் அறிந்­துள்­ளனர். தற்­போ­தைய புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான முன்­னெ­டுப்­புகள் அனைத்தும் சமஷ்­டியை நோக்­கியே செல்­கின்­றன.

பல விட­யங்­களை அர­சாங்கம் மறைத்­துள்­ளது. எனவே எந்­த­வ­கை­யிலும் தற்­போ­தைய புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு அனு­மதி வழங்க முடியாது. அர­சாங்கம் உட­ன­டி­யாக தீர்­மா­னத்தை மாற்­றிக்­கொள்ள வேண்டும் .

அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மாநா­யக்க தேரர்கள் மிகவும் தெளி­வாக இதனை குறிப்­பிட்­டுள்­ளனர். அதே போன்று இலங்­கையின் அதி உச்ச பௌத்த பீடங்­க­ளான சியாம் , அம­ர­புர மற்றும் ராமஞ்ஞ பீடங்­களின் மஹா­நா­யக்க தேரர்கள் கூட்டு அறிக்கை வெளி­யிட உள்­ளனர்.

அதன் பின்னர் அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து பேச முடி­யாது. பௌத்த சாச­னத்தை மீறி செயற்­பட நினைத்தால் நிலைமை மோச­ம­டையும்.

அனைத்து பிக்­கு­களும் பல்­வேறு வழி­களில் அரச எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடுப்­ப­டு­வார்கள். இதனால் ஆட்­சியை விட்டு செல்ல வேண்டிய நிலையே நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஏற்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை நிறை­வேற்ற பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை போதாது.

நிச்­சயம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும். அப்­போது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை தோல்­வி­ய­டைய செய்வோம். தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக அர­சி­ய­ல­மைப்பை யாருக்கும் உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது.

மாகாண சபை முறைமையை 13 திருத்தம் ஊடாக இந்தியா பலவந்தமாகவே இலங்கை அரசியலமைப்பிற்குள் திணித்தது. தமிழீழ கோரிக்கையின் ஒரு பகுதியே அதுவாகும் .

எனவே சட்டபூர்வமாக தமிழீழம் உருவாக்கப்படும் நிலைமையே புதிய அரசியலமைப்பில் காணப்படுகின்றது. இதனை கண்டித்து புதிய அரசியலமைப்பு ஒன்றின் அநாவசிய தன்மையை குறிப்பிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மகஜரை அனுப்பு வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

05-1