இலங்கையில் இப்படி ஒரு பெண்ணுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை!

குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மகேஸ் வீரமன், 21 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

15 வயதான சிறுவன் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு குறித்த பெண்ணுக்கு எதிராக 3 குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

6_V_Rapedஇந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையில் அந்த பெண் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு குற்றத்திற்கு 7 வருடங்கள்படி, மூன்று குற்றங்களுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று குற்றங்களுக்கும் தனி தனியாக 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்தாவிடின் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த தீர்ப்பு வழங்கும் போது அந்த பெண்ணின் உறவினர்கள், நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் கெகிராவ – மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான பெண்ணாவார்.

தனது உறவினர் ஒருவரின் மகனையே அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்கு பெண்ணொருவருக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை, இலங்கை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.