கட்டிப்பிடித்த இளைஞனால் இளம்பெண்ணுக்கு கிடைத்த பத்தாயிரம் ரூபா!

நீரோடையில் குளித்­துக் கொண்டி­ருந்த இளம் பெண்ணை, கட்­டி­ய­ணைத்த குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞ­னுக்கு கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­யும், தண்­ட­மும் விதித்து, பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு இழப்­பீ­டும் வழங்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

பிபிலை நீதி­மன்­றில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­போதே, நீதி­வான் மேற்­படி உத்­த­ர­வைப் பிறப்­பித்­துள்­ளார்.

நீரோ­டை­யில் குளித்­துக் கொண்­டி­ருந்த இளம் பெண்ணை, அந்­தப் பெண்­ணைக் காத­லிப்­ப­தா­கத் தெரி­விக்­கும் இளை­ஞன் கட்­டி­ய­ணைத்­தமை குறித்து, பிபி­லைப் பொலி­ஸாரால் இளை­ஞ­னுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இளை­ஞ­னுக்கு ஆயி­ரத்து ஐநூறு ரூபா தண்­ட­மும், பாதிக் ­கப்­பட்ட பெண்­ணுக்கு 10 ஆயி­ ரம் ரூபா இழப்­பீ­டும் வழங்­கு­மா­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

girl (1)