பிரேஸிலில் சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவுசெய்தவற்கான அழகுராணி போட்டி அண்மையில் நடைபெற்றது.
மிஸ் பம் பம் பிரேஸில் எனும் இப் போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் சிலர் இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடையணிந்து போஸ் கொடுத்தனர்.
பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் அவர்கள் இறைச்சியினலான ஆடை அணிந்தனராம்.
பிரேஸிலின் சாவோ பௌலோ நகரிலேல் அண்மையில் மிஸ் பம்பம் போட்டி நடைபெற்றது. இதன்போது சுமார் 50 கிலோ எடையுள்ள இறைச்சியை தமது நீச்சலுகைளுக்கு மேலாக இவர்கள் ஆடை போல் அணிந்திருந்தனர்.
பெண்கள் வெறும் இறைச்சித் துண்டு அல்ல என உணர்த்துவதே தமது நோக்கம் என இவர்கள் தெரிவித் துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல பாடகிகளில் ஒருவரான லே டி காகா, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை விருது வழங்கல் விழாவவொன்றில், இறைச்சியினாலான ஆடையை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.