உலக கோடீஸ்வரரின் பார்வையில் சிக்கிய இலங்கை!

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இலங்கையின் மருத்துவ துறைக்கு உதவ முன்வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ்சுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, இந்த உதவியினை வழங்க அவர் முன்வந்துள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் தொடர்பாக அபுதாபியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அதற்கு உதவ தாம் தயாராகவுள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

bill_vc1