நடந்த அழிப்பு நடவடிக்கை! நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் கைப்பற்றப்பட்ட ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரித்து அழிக்கப்பட்டது.

எரிக்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாகக் காணப்பட்ட கஞ்சா போதைப் பொருளே அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆகியோர் முன்னிலையிலேயே அவை அழிக்கப்பட்டுள்ளன.

Judge-Ilancheliyan