பிரபல தமிழ் நடிகை ஜோதிகா மீது வழக்கு பதிவு; காரணம் அந்த வார்த்தை.!

பிரபல தமிழ் நடிகை ஜோதிகா மீது வழக்கு பதிவு; காரணம் அந்த வார்த்தை.!

பிரபல தமிழ் சினிமா குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஜோதிகா, இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே சிவகுமாரின் மகன் மற்றும் நடிகருமான சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தததும் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிய ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். இந்த படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இவருக்கு மீண்டும் பல ரசிகர்கள் கூடினார்கள். அதுவும் பெண் ரசிகர்கள் தான் அதிகம்.

பிரபல தமிழ் நடிகை ஜோதிகா மீது வழக்கு பதிவு; காரணம் அந்த வார்த்தை.!

இந்த படத்தை தொடர்ந்து இவர் மகளிர் மட்டும் என்ற படத்தில் பெண்கள் சம்மந்தபட்ட கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் நாச்சியார் என்ற படத்தில் நடித்து அந்த படத்தின் டீசரும் வெளியானது இதில், ஜோதிகா பெண்களை இழிவு படுத்தும் விதமான கேட்ட வார்த்தையை பேசியுள்ளார். இதை கேட்ட மக்கள் ஜோதிகா மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது இது பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என கோவை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 294 பி சட்டப்பிரிவின் படியும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.