ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மை தான்!. பரபரப்பு தகவல்!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மை தான் என அவரது உறவினரான லலிதா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், “ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள், அவர் எங்கள் மாமா மகள். ஜெயலலிதாவுக்கும் ஒருவருக்கும் காண்டாக்ட் இருந்தது தெரியும்.

109771_14262ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை. எங்கள் பெரியம்மாதான் அவருக்கு பேறுகாலம் பார்க்க உதவி செய்தார், ஜெயலலிதா இந்த விடயத்தை தெரிவிக்க கூடாது என்று சத்தியம் வாங்கி வைத்திருந்தார்.

1970க்கு பிறகு ஜெயலலிதா எங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. குழந்தை பேறுகால நேரத்தில் மட்டுமே உதவிக்காக எனது பெரியம்மாவை அழைத்தார்.

சைலஜா ஜெயலலிதாவின் சகோதரி முறை, சைலஜாதான் அம்ருதாவை வளர்த்தார் என்பதால் ஒருவேளை இதுதான் ஜெயலலிதாவின் மகளாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால் அந்த குழந்தை அம்ருதாவா என்று உறுதியாக தெரியவில்லை, டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் உண்மை தெரியவரும்.

அம்ருதாவை ரஞ்சனி மூலமாக கடந்த 3 மாதங்களாகதான் தெரியும், என்னை அத்தை என்று கூப்பிடுகிறார்.

அம்ருதா மனதில் தனது அம்மா ஜெயலலிதா என்று நினைக்கிறார், ஐயங்கார் முறைப்படிதான் ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடைபெற வேண்டும் என்று அம்ருதா விரும்புகிறார்.

சொத்துக்காக அவர் ஆசைப்படுவதை போல தெரியவில்லை, ஜெயலலிதா அரசியல் களத்திற்கு போன பிறகு நாங்கள் அவரை சந்திக்கவில்லை.

1980களில் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது. அப்போதே, ஜெயலலிதாவின் தாய் சத்யா இறந்துவிட்டதால், மனிதாபிமான அடிப்படையில் எனது பெரியம்மா பேறுகாலம் பார்க்க சென்றார்.

அதேநேரம், இதற்காக எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை. அம்ருதாவை டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் மட்டுமே அது ஆவணமாக அமையும்” என தெரிவித்துள்ளார்.