குடும்ப வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவனைக்கு செலவு!

குடும்ப வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவனைக்கு செலவு!
வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவணைக்கு செலவு செய்யப்படுவதாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

5a225e0a9512b-IBCTAMIL

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குழு பொறுப்பாசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று(01) நடைபெற்றது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு செயலமர்வில் தலைமை தாங்கி பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

குடும்ப வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவனைக்கு செலவு!

அவர் மேலும் தெரிவிக்கையில்……

வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவணைக்கு செலவு செய்யப்படுகிறது.

5a225e0ab3f53-IBCTAMIL

இது நூற்றுக்கு 33 வீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை நாட்டிலே முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் முதலில் பாடசாலை மாணவர்களுக்கு நல்ல அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்கள் வழங்கப்படவேண்டும்.

இதன்மூலம் அவர்களின் தந்தை, சகோதர்கள், உறவினர்களை போதையில் இருந்து மீட்க முடியும்.ஒவ்வொரு பாடசாலைகளிலும் முறையாக பேண்தகு அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக உணவுப் பழக்கம், சூழல் முகாமைத்துவம், சிறுவர் பாதுகாப்பும் துஸ்பிரயோகமும், போதைவஸ்து பாவனை, நஞ்சற்ற உணவுகள் ஆகிய ஐந்தையும் முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மனிதன் ஆரோக்கியமான முறையில் வாழ முடியும்.

இவற்றை ஒவ்வொரு பாடசாலைகளும் வினைத்திறனுடனும், சவாலாகவும் எடுத்து நாட்டை சுபீட்சமிக்கதாக கட்டியெழுப்ப வேண்டும்.

குடும்ப வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவனைக்கு செலவு!

நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு கல்வியூடாக இவற்றை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. இதனை ஒவ்வொரு அதிபர்களும் பாடசாலையில் நடைமுறைப்படுத்தி ஆசிரியர்களூடாக பேண்தகு அபிவிருத்தியை மாணவர்களுக்கு தெளிவூட்டும்போது இந்த நாட்டையும், கல்விச் சமூகத்தையும் வளம்கொளிக்கச் செய்யலாம்.

போதைப்பொருள் பல்வேறு வடிவங்களில் வருகின்றது. இது சம்பந்தமாக ஒவ்வொரு ஆசிரியர்களும் போதைப்பொருட்களை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் நோய்களுக்கு அரச வைத்தியசாலைகளிலில் அரசாங்க செலவுத்தொகையாக 22 வீதம் செலவு செய்யப்படுகின்றது.

குடும்ப வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி போதைப்பொருள் பாவனைக்கு செலவு!

அதுமட்டுமல்லாமல் போதைப்பொருள் பாவனையால் அதிக நோய்கள் மனிதனை விரைவாக தேடிப்பிடிக்கின்றது.
மேலும் முறையான உணவு பழக்கமுறை மனிதர்களிடையே இல்லாமல் காணப்படுகின்றது.

இதனால் தொற்றாநோய்கள் மனிதனுக்கு அதிகரித்து காணப்படுகின்றது.எனவே பேண்தகு அபிவிருத்தியை முறையாக நடைமுறைப்படுத்தி ஆரோக்கிய சமூகமாக வாழ்வோம் எனத்தெரிவித்தார்.