15 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த இறந்துபோன சிசு…!

4 மாதத்தில் செய்த தவறான கருக்கலைப்பால், 15 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இறந்துபோன சிசு இருந்திருப்பது டாக்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

large_abortion-3088ஆனால், சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி, வாந்தி என்று பிரச்சினைகள் அதிகரித்ததால், மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் எக்ஸ்ரேவை பார்த்த டாக்டர் வயிற்றில் சிசு இறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அப்பெண்ணிடம் விசாரித்த போது 15 ஆண்டுகளுக்கு முன்பு கருவுற்றதாகவும், கனவரின் எதிர்ப்பால் 4 மாதத்தில் கருவை கலைத்ததாகவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இறந்த சிசுவை டாக்டர்கள் அகற்றினர்.

இந்த பிரச்சினைக்கு காரணம், 4 மாதம் ஆன நிலையில் கருவை கலைத்ததும், முறையாக கரு கலைப்பு செய்யாததும் தான் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.