கொழும்பு மாவட்டத்தின், கொஹுவல – கடவத்தை வீதி, கலுபோவில பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது அந்த அறையில் இருந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 57 வயதுடைய, மனநோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.