கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட 13 இராமேஸ்வர மீனவர்களை இன்று தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் அலெக்ஸ் ராஜா கிரேசின் மீனவர்களை எதிர்வரும் டிசம்பர் 29ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.