இரவு நேர தபால ரயிலில் சடலம் மீட்பு!

பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் மலசலகூடத்திற்குள் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

maxresdefaultகொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால ரயிலில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் பாதுகாப்பு பிரிவினரால் பண்டாரவளை ரயில் நிலையத்தில் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது..

உயிரிழந்தவர் கிட்டத்தட்ட 55 வயதுடையவர் எனவும், அவர் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைக்காக சடலம் பண்டாரவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.