மோடிக்கு வாக்களிக்க மாட்டோம்! – மாணவர்கள்

ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவதை நிறுத்தும் வரையில், பிரதமர் மோடிக்கு வரும் தேர்தல்களில் வாக்களிக்க மாட்டோம் என்று மத்தியபிரதேசத்தில் உள்ள தொழிலக பயிற்சி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

மத்தியபிரதேச மாநிலம் ஹோசங்காபாத் மாவட்டம் இட்டார்சியில் விஜயலட்சுமி இண்டூஸ்டிரியல் என்ற ஐடிஐ பயிற்சி மையம் ஒன்று செயல்படுகிறது.

அங்குள்ள ஆசிரியர்கள் இன்று காலை மாணவர்களை வைத்தனர் பிரதமர் மோடிக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.

இது குறித்து வந்த செய்திகளின்படி, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தும் முறைகள் கொண்டுவரப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆன்லைன் தேர்வு முறை அமல்படுத்துவதை திரும்ப பெறும் வகையில், வரும் தேர்தல்களில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க போவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்தனர்.

மேலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோடிக்கு எந்த வகையிலும் ஆதரவு தரப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.