வாக்களிப்பதற்காக மாட்டுவண்டியில் மக்கள்!

கிளிநொச்சி – புன்னைநீராவி பகுதியை சேர்ந்த சில பொது மக்கள் இன்றைய தினம் மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.மீள்குடியேற்றப்பட்டு 08 வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் வீதிகள், மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்க கூடிய நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு மாட்டு வண்டியில் சென்று வாக்குகளை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.