வான்- டிப்பர் மோதி ஒன்றரை வயதுச் சிறுமி பரிதாப மரணம்!!

கிண்ணியா கச்சக்கொடித்தீவு பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் வேனில் சென்ற சிறுமி நேற்றிரவு (15) 10.40 மணியளவில் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம் 99ம் கட்டையில் வசித்துவரும் யூசுப் யனீயா (ஒன்றரை வயது) எனவும் தெரியவருகின்றது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது 99ம் கட்டைப்பகுதியில் வசித்து வரும் காத்தான்குடியைச்சேர்ந்த ஹாரூன் (பலசரக்குக்கடை) தனது உறவினர்களை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த வேளை, அவரது வேனுக்கு காற்று போய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதினாலேயே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.