கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்காததால் கூட்டாட்சியை உருவாக்குவது தொடர்பில் அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைத் திரட்டினால் முக்கிய இடங்களில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை கிடைத்துவிடும் என்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அரச தலைவர் மைத்திரிபாலவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
தேர்தல் முடிவு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக இணைந்து ஆட்சியமைப்பது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.