நாடு கடத்தப்படும் நிலையிலிருந்த இலங்கைக் குடும்பத்திற்கு அடித்த அதிஷ்டம்!!

நியூசிலாந்தில் நாடு கடத்தலை எதிர்நோக்கிய இலங்கை குடும்பத்தினரை தொடர்ந்தும் ஒரு வருடத்திற்கு தங்கியிருக்க அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.நியூசிலாந்து, Queenstown பகுதியை சேர்ந்த தினேஷா அமரசிங்க, அவரது கணவர் மற்றும் 3 ஆண் பிள்ளைகளே இவ்வாறு நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.Clutha Southland உறுப்பினர் Hamish Walker எடுத்த நடவடிக்கை காரணமாக, இலங்கை குடும்பம் மேலும் ஒரு வருடம் நியூசிலாந்தில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில், அவர்களின் குடியிருப்பு பயன்பாடு மதிப்பீடு செய்யப்பட்டு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இன்று காலை அவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதாக Hamish Walker குறிப்பிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு இந்த தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார்.அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஆக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் Queenstownவுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி இருந்த போதிலும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த போதிலும் அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். எனினும் 2015 ஆம் ஆண்டு அவருக்கு வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோம்பர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் இனி வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவர்களது குடும்பம் கடந்த வருடம் நவம்பர் 21 நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில், 8 வருடங்களின் பின்னர் நாடு கடத்தப்படவிருந்த இந்த குடும்பத்திற்காக அந்த பகுதியை சேர்ந்த 400 குடும்பங்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குடும்பத்திற்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என Clutha Southland உறுப்பினர் Hamish Walker குறிப்பிட்டுள்ளார்.