நோயை அடியோடு போக்க வல்ல அரச மரம்!

அரச மரம் பல்வேறுபட்ட நோயை அடியோடு போக்க வல்லது. அரசமரத்தின் அற்புத சக்திகளை நம் மேலும் தெரிந்துக்கொள்ளுவோம்.

தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.

குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.

தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.

ஆயுள் தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

குறிப்பு

ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது.