வன்முறைகள் ஏற்பட்ட பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திகன மற்றும் கெங்கொல்ல பகுதிகளுக்கு இன்று பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட உள்ளார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார்.

அத்துடன், கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறும் விசேட கலந்துரைடலிலும் அவர் பங்கேற்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற குழுவொன்றும் இன்று கண்டிக்கு செல்லவுள்ளது.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் மதத் தலைவர்கள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

வன்முறைகள் ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களுடன் அவர்கள் கலந்துரையாட உள்ளனர்.