இலங்கை விடயத்தில் மனித உரிமை ஆணையாளர்!

இலங்கை மீதான ஐ.நாவினுடைய கவனம் குறைந்து வந்தாலும் ஐ.நாவின் அழுத்தம் போதுமானதாக இல்லை என மனித உரிமை செயற்பாட்டாளர் செபமாலை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டதொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் 24 சேவையின் ஊடக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பு சபைக்கோ, குற்றவியல் நீதிமன்றத்திற்கோ சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐ.நா ஆணையாளர்கள் முடிவுகளை எடுத்தால் சிறப்பாக அமையும்.அது தான் மக்களுடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.