எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில், உண்மை இது தான்.!

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட்டும் செய்தார். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டும் தான் இருந்தார்கள்.

இந்த மூவரில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்ய போகிறார் என்று சிந்தித்த நிலையில், தான் யாரையும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டால் மற்ற இருவரும் நிலை என்று கூறி மேடையிலேயே அழுதுவிட்டார். இவர் அழுததால் மக்களும் இவர் கூறுவதும் சரி தான் என்று இவரது முடிவுக்கே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அந்த நிகழ்ச்சி பற்றின உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்யா என்ன முடிவு எடுக்கிறாரோ அது தான் இறுதி முடிவாம். நிகழ்ச்சியின் முடிவு ஆர்யா எடுப்பதில் தான் இருக்கிறதாம். மேலும், இவர் அந்த பெண்களில் ஒருவரை திருமணம் செய்துகொண்டால் நிச்சயம் இரண்டு வருடங்கள் வாழ வேண்டுமாம். இதனால் தான் ஆர்யா எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லையாம்.