எப்படி வருகிறது சர்க்கரை நோய்? தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால்??

தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

* சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும் போது சிறிது உப்பைப் போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.
கஞ்சியை ஆற வைத்து குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

*சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

 சாதத்தை எப்படி சாப்பிட வேண்டும்? :-

*கொதிக்க கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது. சாதத்தை மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

*சாதத்தை சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் குதிவாதம், மூட்டுவாதம் ஏற்படும்.

 பழைய சோறு :-

ஆரம்ப காலத்தில் பழைய சோறு சாப்பிட்டு தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டுவலி ,தோல் நோய்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

*பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சாதத்தின் பயன்கள் :-

*சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகம் ஏற்படுவதும்,பித்தம் உண்டாவதும் நீங்கும்.

*பச்சரிசி சோற்றில் பால் சேர்த்து சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.