இலங்கைக்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் ஆசிரியையே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு சென்ற அரசாங்க பேருந்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து நீர்கொழும்புக்கு செல்வதற்காக பேருந்தில் ஆசிரியை மற்றும் அவரது கணவர் சென்றுள்ளனர்.
ஆசிரியை மற்றும் அவரது கணவர் பேருந்து நிலையத்தில் இறங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த நடத்துனர் பலவந்தமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பில் வசிக்கும் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.