ஹிருணிகா கூறியது பொய்!

ஐக்கிய தேசியக் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்தை அக்கட்சியின் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கையில் அதிருப்தி கொண்டுள்ள ஐ.தே.கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாக ஹிருணிகா பிரேமச்சந்திர அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த கருத்தை தாம் மறுப்பதாக அந்தக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

எனினும், அவ்வாறான முடிவை தாம் எடுக்கவில்லை என்றும், தமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.