மெர்க்கலின் சுயரூபம்.. திருமணத்தை நிறுத்துங்கள்: இளவரசர் ஹரிக்கு எழுதப்பட்ட கடிதம்

திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள் என இளவரசர் ஹரிக்கு மெர்க்கலின் சகோதரர் தாமஸ் பென்ஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் மெர்க்கல் பற்றி எழுதியுள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனவரான மெர்க்கல் இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற செய்தி வெளியான நாளில் இருந்து, மெர்க்கலின் குடும்பத்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிகமாக, மெர்க்கல் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். மே 19 ஆம் திகதி ஹரி – மெர்க்கல் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் நடந்துவருகின்ற நிலையில், மெர்க்கலின் சகோரர் தாமஸ், இளவரசர் ஹரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நடக்கவிருக்கும் உங்களது திருமணத்தை நிறுத்துவிடுங்கள். மெர்க்கல் வாழ்க்கையில் ஆழமில்லாத பெண் ஆவாள். மேலும் அதிகமாக கற்பனையில் வாழ்பவள். அவளைப்பற்றி உலகமே அறிந்துகொண்டிருக்கையில், நீங்கள் மட்டும் ஏன் மெர்க்கலின் சுயரூபதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்.

அவள் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவள். இந்த திருமணம், பிரித்தானிய ராயல் திருமண வரலாற்றில் மிகப்பெரிய தவறு ஆகும் என எழுதியுள்ளார்.