ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் வசிக்கும் 24 வயதான அழகரத்தினம் டிசாந்தினி எனும் இளம் குடும்பப் பெண்ணே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் வீட்டின் வாசல் கதவருகே காணப்படுகிறது.இதே வேளை பெண்ணின் 31 வயதான கணவனும் , ஒரு வயது குழந்தையும் வீட்டில் இல்லை எனவும் , அவரது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.