மிகப்­பெ­ரிய கண்­ணாடி மாளிகை: கண்கவர் அம்சங்களுடன்..!

லண்டனின் நக­ரி­லுள்ள கியூ பகு­தியில் உலகின் மிகப்­பெ­ரிய விக்­டோ­ரியா கண்­ணாடி மாளிகை (தாவ­ர­வியல் பூங்கா) உள்­ளது. 1863 ஆம் ஆண்டு பிரிட்டன் அர­சாங்­கத்தால் தொடங்­கப்­பட்ட இந்த கண்­ணாடி மாளிகை மிகவும் புகழ்­பெற்­றது. இதில் பல்­வேறு வகை­யான தாவ­ரங்கள் வைக்­கப்­பட்­டுள்­ளமையும் சிறப்பம்சமாகும்.

இங்கு ஏரா­ள­மான சுற்­றுலா பய­ணிகள் வந்து குவி­கின்­றனர். உலகின் பல்­வேறு பகு­தி­களில் உள்ள வித்­தி­யா­ச­மான தாவ­ரங்கள் இங்கு பார்­வைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்­தன. 2003 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்­ப­ரிய தளங்­களில் ஒன்­றாக இதனை அங்­கீ­க­ரித்­தது.

பல ஆண்­டு­க­ளாக பயன்­பாட்­டி­லி­ருந்த  இக்­கண்­ணாடி மாளிகை சற்று சேத­ம­டைந்­தி­ருந்தமையின் காரணமாக சரி செய்­வ­தற்­காக கடந்த 5 ஆண்­டுகள் மூடப்­பட்­டி­ருந்­த நிலையில்,  41 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் செலவில் இதன் பாரா­ம­ரிப்பு பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டது.

அதன் பின்னர் பல புதிய தாவரங்களின் தொகுப்புகளுடன் கண்ணாடி மாளிகை மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகம்.