ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்த வலுப்படுத்தப்படும் சட்டங்கள்!

சிங்கப்பூரில் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவதற்கான சட்டங்களை மேலும் வலுப்படுத்த எண்ணியிருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

வர்த்தகப் பயன்பாட்டுக்கு அல்லாமல் நிழற்படங்களை எடுக்கவும், காணொளிகளைப் பதிவு செய்யவும் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்துகிறது.

மேலும் , பாதுகாப்பாக ஆளில்லா வானூர்திகளை இயக்குவது எப்படி என்பது பற்றிப் பயனீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்வது அவசியம் என்று குழு கூறியது.

மற்றும் , சிங்கப்பூரில் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் சட்டத்தை வலுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் பயனளிக்கும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.