தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான விஷால் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியில் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறினார். விஷால் கூறியதாவது,
துணை இயக்குநராக சினிமா பயணத்தை துவக்கிய என்னை நடிகனாக பார்த்தவர் நடிகர் அர்ஜுன் தான்.
அதன் பின்னர் தான் செல்லமே படத்தில் நடித்தேன். நான் நடிகனாக அவர் தான். நான் துணை இயக்குநராக பணிபுரியும் போது நான் வாங்கிய முதல் சம்பளம் 100 ரூபாய் தான்.
படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு முதலில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். அதற்காக தொடர்ந்து கமர்ஷியல் படங்களை மட்டுமே பண்ண கூடாது என்பதால் பாலாவின் `அவன் இவன்’ எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதனால் தொடர்ந்து பெயருக்காக மட்டுமே படம் பண்ண முடியாது. வித்தியாசமான படங்களை பண்ணவே ஆசைப்படுகிறேன்.
அடுத்ததாக புதுமுக இயக்குநருடன் இணைகிறேன். அந்த படமும் சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படம் தான்.
வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண். எனது தவறுகளைசுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துவார்.
எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் அவர். எனது நெருங்கிய தோழி. நாங்கள் நல்ல நண்பர்கள். எனது குறிக்கோள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிடுவது தான். நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் பகிர்ந்து கொள்வேன் என்றார்.
மிஷ்கின் பற்றி பேசும் போது, வருடத்திற்கு ஒரு படத்திலாவது அவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.
அடுத்ததாக துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் அவருடன் இணையவிருக்கிறேன். சண்டைக் காட்சிகளில் என்னையே வியக்க வைத்தவர் மிஷ்கின் தான். இவ்வாறு விஷால் பேசினார்.