அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக தமது தரப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் இல்லத்தில், குறித்த குழுவினர் இன்று ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, குறித்த விடயம் தொடர்பில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.