குடிகார கணவரை கும்மி எடுத்த மனைவி!! (அதிர்ச்சி வீடியோ)

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் குடித்து விட்டு தகராறு செய்த கணவனை மனைவியே உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் தெற்கு பூலாங்குள பகுதியில் வசித்து வந்த கூலித் தொழிலாளியான லட்சுமணன் (42) என்பவரே இவ்வாறு உலக்கையால் அடிவாங்கி உயிரிழந்துள்ளார்.தினசரி கூலி பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து வீணடித்து வந்துள்ளார்.

இதன் காரணமாக லட்சுமணனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

அது மட்டும் இன்றி குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி லட்சுமி பணம் தர மறுக்க, அவரை அடித்து உதைத்துள்ளார் .லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தம்பதிகளை சமாதனப்படுத்தியுள்ளனர்.

பிறகு பிரச்சினை தீர்ந்ததும் லட்சுமணன் வீட்டிற்கு வெளியில் பாயை விரித்து படுத்து உறங்கத்தொடங்கியுள்ளார். கோபத்தில் அதிகாலை மூன்று மணியளவில் லட்சுமி வீட்டிலிருந்த உலக்கையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

வலி தாங்க முடியாமல் குறித்த பெண்ணின் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.