உலக சனத்தொகையில் நாள்ஒன்றுக்கு ஒரு பில்லியன் சிறுவர்கள் உணவின்றி பட்டினியால் வாடுவதுடன் நாள் ஒன்றுக்கு 22000 சிறுவர்கள் பட்டினியால் உயிரிழப்பதாக சர்வதேச நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வில் மேலும் தெரியவருவதாவது,
சர்வதேச அளவில் 2754 பெரும் செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் உலகின் 9.2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பணத்தில், ஒன்பது கோடி இருபது இலட்சம் அமெரிக்க டொலர்களை உரிமையாக வைத்திருக்கின்றார்கள். இவர்களின் சொத்து 2016 ஆம் ஆண்டைவிட 24% அதிகரித்துள்ளது.
இந்த 2754 பேரில் 680 பேர் அமெரிக்கவைச் சேர்ந்தவர்கள். 90 பேர் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 730 கோடி உலக சனத்தொகையில் 1% செல்வந்தர்களிடம் சர்வதேச பணம் 82% நிரம்பியிருக்கின்றமையும் குறிப்பிடதக்கது.