கலுபோவில, கொஹூவலயில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெஹிவளை, கல்கிசை தீயனைப்பு படையினர் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தள்ளனர். எனினும் குறித்த தனியார் வங்கியின், ஏ.டி.எம் இயந்திரம் மற்றும் வங்கியின் சில பகுதிகள் தீயினால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.