இளம்பெண்னுக்கு பேஸ்புக் நண்பர் செய்த கேவலமான செயல்..

அரியானா மாநிலம் குர்கான் பகுதியியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 1 வருடமாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ராகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

தற்போது தனது பேஸ்புக் நண்பர் ராகுல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண், ராகுல் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சமூக வலைதளங்கள் மீதான மோகமும் அதிகரித்து வருவது வருந்தத்தக்க உண்மையாகும்.